Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

திருச்சி மாநகரின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள்

திருச்சி மாநகரில் நீண்டகால மாக செயல்படுத்தப்படாமல் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும் என திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சக்திவேல், எஸ்.சுப்பி ரமணியன் ஆகியோர் திருச்சியில் நேற்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:

திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பால் பண்ணை- துவாக்குடி சர்வீஸ் சாலை, ஜி கார்னர் சுரங்கப்பாதை ஆகிய திட் டங்கள் ஏறத்தாழ 10 ஆண்டு களாக செயல்படுத்தப் படாமலேயே உள்ளன.

பால்பண்ணை ரவுண் டானா பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு வதைத் தவிர்க்க வேண்டும். காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். வயலூர் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும். அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மாநகர் முழுவதும் புதை சாக்கடைத் திட்டப் பணி களால் சேதமடைந்துள்ள இடங்களில் விரைந்து புதிய சாலை அமைக்க வேண்டும்.

பல்லவன் ரயிலை மீண்டும் திருச்சியிலிருந்தே இயக்க வேண்டும். திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றை விரைந்து நிறை வேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அடங்கிய கையேட்டை மாவட்ட நிர்வா கம், அரசியல் கட்சியின ருக்கும் வழங்க திட்ட மிட்டுள்ளோம் என்றனர்.

பேட்டியின்போது, நிர்வாகிகள் லெனின், நடராஜன் ஆகியோர் உடனி ருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x