Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நல வாரிய ஆன்-லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசி னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x