Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
புதுச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிஎஸ்சி, பிஏ, பி.காம் ஆகிய பாடப்பிரிவுகளில் இதுவரை நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான மாப்-அப் கலந்தாய்வு நேற்று முன்தினம் பாரதிதாசன் அரசுமகளிர் கல்லூரியில் தொடங்கி யது. 99.999 முதல் 66 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற புதுச்சேரி அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடந்தது. நேற்று 59.999 முதல் 35 வரை கட்ஆப் மதிப்பெண்எடுத்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கவிருந்தது. கனமழை பெய்ததால் நேற்று நடக்கவிருந்த கலந்தாய்வு வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT