கரூரில் புதுப்பிக்கப்பட்ட ஆசாத் பூங்கா திறப்பு

கரூரில் புதுப்பிக்கப்பட்ட ஆசாத் பூங்கா திறப்பு
Updated on
1 min read

கரூர் ஆசாத் சாலையில் ஆசாத் பூங்கா உள்ளது. இப்பூங்காவில் உள்ள காந்தி சிலை மற்றும் பூங்கா ஆகியவை ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பூங்காவில் காந்தி சிலை புதுப்பிப்பு, புதிதாக நீரூற்று, அலங்கார மீன்கள் வளர்ப்பு, பெரியவர்கள், குழந்தைகள் அமர்வதற்கு விலங்குகள் வடிவில் இருக்கைகள், குழந்தைகள் விளையாட ஊஞ்சல்கள் உள்ளிட்டவை மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட ஆசாத் பூங்காவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பூங்காவை பார்வையிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in