விருதுநகர் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் திறப்பு

விருதுநகர் பள்ளியில்  வகுப்பறை கட்டிடம் திறப்பு
Updated on
1 min read

விருதுநகர் ஆர்சி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இப்பள்ளிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கோகுலம் தங்கராஜ், மாலா தங்கராஜ் ஆகியோர் ரூ.1.45 கோடியில் வகுப்பறைக் கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளனர். இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் கண்ணன் தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்தார். மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி ஆசி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கோகுலம் தங்கராஜ், மாலா தங்கராஜ், அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலர் தர்மலிங்கம், நகரச் செயலாளர் முகம்மது நயினார், சிவகாசி கிழக்கு ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி, வடக்கு ஒன்றியச் செயலர் தெய்வம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி, மாவட்டக் கவுன்சிலர்கள் நாகராஜ், பச்ச ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in