பெற்றோரால் கைவிடப்பட்டு மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைப்பு

பெற்றோரால் கைவிடப்பட்டு மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைப்பு
Updated on
1 min read

திருப்பூர் - தாராபுரம் சாலையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகே, பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தை கடந்த 27-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இந்த குழந்தை, பச்சிளம்குழந்தைகள் வார்டில் பராமரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. குழந்தைக்கு மிருத்துள் என பெயரிடப்பட்ட நிலையில், மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் பாக்கியலட்சுமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் பங்கேற்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை பெற்றோரால்கைவிடப்பட்ட 7 குழந்தைகள் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட 4 ஆண், 3 பெண் குழந்தைகளும் பராமரிக்கப்பட்டு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in