நாமக்கல்லில் தொழில்நெறி கண்காட்சி

நாமக்கல்லில் தொழில்நெறி கண்காட்சி
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் நடந்தது.

கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் மாரிச்சாமி வரவேற்றார். ஆட்சியர் மெகராஜ் கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசினார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்ரா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்,

கல்லூரி முதல்வர் முருகன், ‘நூல்களின் ஆற்றல்’ என்ற தலைப்பில் பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதிகா போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்தும், முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் முப்படைகளில் வேலைவாய்ப்பு பற்றியும், மாவட்ட தொழில்மைய உதவி பொறியாளர் தொழில் முனைதல் மற்றும் வங்கி கடன் உதவி பற்றியும் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in