முதல்வரை அவதூறாக பேசிய கனிமொழி எம்.பி வழக்கு மார்ச் 11-க்கு ஒத்திவைப்பு

முதல்வரை அவதூறாக பேசிய கனிமொழி எம்.பி வழக்கு  மார்ச் 11-க்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் கடந்த 2018-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம்தேதி அதிமுக ஆட்சியை கண்டித்துதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.

இவர் தமிழக அரசையும், முதல்வரையும் பற்றி அவதூறாக பேசியதாக கூறி மாவட்ட அரசுவழக்கறிஞர் சீனிவாசன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுகனிமொழி எம்.பி. ஆஜராக வில்லை. அவர் சார்பில் வழக் கறிஞர் ஆஜராகி, இவ்வழக்கில் கனிமொழி எம்.பி. ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளதாக கூறி, அதற்கான உத்தரவு நகலை சமர்பித்து மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in