கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் : 114 பேர் கைது

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச் சியில் 3-வது நாளாக நேற்று மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 114 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதியம் ஆகியவற்றை ரத்து செய்து வரையறுக் கப்பட்ட ஊதிய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். கரோனா பரவல்தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும்.

அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண் டும் உள்ளிட்ட 10-ம் அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 3 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மாவட்ட அரசு ஊழியர் சங்கத் தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 42 பேரை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 15 பெண்கள் உட்பட 40 பேரை விழுப்புரம் தாலுகா போலீஸார் கைது செய்தனர்.

இதே போல் கடலூரில் ஜாக்டோ-ஜியோ மாவட்டச் செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் மறி யலில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in