பொக்லைன் வாகனத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு

பொக்லைன் வாகனத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே பொக்லைன் வாகனத்தின் கீழ் படுத்திருந்த கூலித் தொழிலாளி, வாகனத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போத்திநாயனப்பள்ளி அருகே உள்ள பெரியதக்கேப்பள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் கோவிந்தராஜ் (30). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் வாகனத்தின் முன்புறம் படுத்து உறங்கினார். இதனை அறியாமல், வேட்டியம்பட்டியைச் சேர்ந்த பொக்லைன் ஓட்டுநரான கோவிந்தராஜ் என்பவர் வாகனத்தை இயக்கினார். இதில், கோவிந்தராஜ் வாகனத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக மகாராஜகடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in