வேலூர் மார்க்கெட்டில்காவல் துறை பாதுகாப்பு வணிகர் சங்கத்தினர் தீர்மானம்

வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் நடந்த வியாபாரிகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல்.படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் நடந்த வியாபாரிகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல்.படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூரில் மார்க்கெட் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

வேலூரில் அனைத்து வணிகர் கள் சங்கத்தின் அவசர ஆலோ சனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு, மாவட்டத் தலைவர் இரா.ப.ஞானவேலு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏ.வி.எம்.குமார் வரவேற்றார். இதில், வேலூரில் வணிகர்களுக்கு ரவுடிகள் தொல்லையால் பாதுகாப்பு இல்லை. எனவே, ரவுடிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூரில் ஆரணி சாலை, சுண்ணாம்புக்கார தெரு, சாரதி மாளிகை, நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

சவ ஊர்வலங்களின் போது மக்கள் கூடும் இடங்கள், வணிகம் செய்யும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in