நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் ரூ.15 லட்சத்தில் நீர்நிலைப் பூங்கா திறப்பு

நாமக்கல்  கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் ரூ.15 லட்சத்தில் நீர்நிலைப் பூங்கா திறப்பு
Updated on
1 min read

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நீர்நிலைப் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்து பூங்காவை திறந்து வைத்தார். தொடர்ந்து ஏரிக்கரையில் மரக்கன்று நடும்பணி மற்றும் கொண்டிசெட்டிப்பட்டி பிரிவு சாலை முதல் கொண்டிசெட்டிப்பட்டி ஏரி எல்லை வரை ரூ.1.54 கோடி மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in