திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

திருவள்ளூர்  ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
Updated on
1 min read

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கக் கோரி நேற்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மதியம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் லட்சுமி, மாவட்ட தலைவர் மணிமேகலா, செயலாளர் லதா, சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in