Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM

சமயபுரம் கோயிலில் 2 கிலோ தங்கம் காணிக்கை

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் 2 கிலோ தங்கம் பக்தர்களால் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலிலுள்ள உண்டியல்களில் அளிக்கப்பட்ட காணிக்கைகளை கணக்கிடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது பக்தர்களின் காணிக் கையாக செலுத்தியிருந்த ரூ.90 லட்சத்து 7 ஆயிரத்து 494 ரொக்கம், 2.182 கிலோ தங்கம், 4.174 கிலோ வெள்ளி, 140 அயல் நாட்டு கரன்சிகள் இருந்தன. இதற்கு முன், கடைசியாக கடந்த ஜன.11-ம் தேதி இங்கு உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x