அரியலூர் அருகே பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை போராட்டம்

அரியலூர் அருகே  பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை போராட்டம்
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் விக்கிரமங் கலத்தை அடுத்த சாத்தம்பாடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி அபிராமி(22). கர்ப்பிணியாக இருந்த இவர், நேற்று முன்தினம் குணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். பிரசவ நேரம் நெருங்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது என தெரிவித் துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர்கள், குண மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். விக்கிரமங்கலம் போலீஸார், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அனை வரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in