Published : 25 Jan 2021 03:17 AM
Last Updated : 25 Jan 2021 03:17 AM

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் பணியாளருக்கு பக்கவிளைவு இல்லை அரசு ஸ்டான்லி மருத்துவமனை விளக்கம்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் பணியாளருக்கு பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி முதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர், தனது உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதனை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், “சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அந்த பெண் கடந்த 19-ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் தனக்கு உடல் வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

மருத்துவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பல பரிசோதனைகளை செய்தனர். அதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 10 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x