Published : 25 Jan 2021 03:17 AM
Last Updated : 25 Jan 2021 03:17 AM
கரோனா தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 22,500 டோஸ்கள் கரோனா தடுப்பூசி வந்துள்ள நிலையில் 20 ஆயிரம் பேருக்கு மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, பத்மநாபபுரம் தலைமை மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை, செண்பகராமன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது.
தினமும் 400 பேருக்கு தடுப்பூசி போட இருந்த நிலையில், அச்சத்தால் சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்த முதலில் தயங்கினர். இதனால் முதல் நாளன்று 55 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
பின்னர் சுகாதாரத்தறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் 1,107 பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT