Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

செய்யாறில் அதிமுக ஆலோசனை கூட்டம்

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தூசி கே.மோகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன், மாவட்ட அவைத் தலைவர் மணி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “இந்தியாவிலேயே அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதிமுக நிர்வாகிகளுடன் பூத் கமிட்டியினர் ஒற்றுமையாக செயல்பட்டு அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார். இதில், ஒன்றியச்செயலாளர்கள் மகேந்திரன், அரங்கநாதன், துரை, குணசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x