Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

தேனியில் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வருக்கு மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு

தேனி அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி அருகே அரண் மனைப்புதூரில் கடந்த 20-ம் தேதி திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது. இதில் அக்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். பூதிப்புரத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது கடுமையாக குற்றம்சாட்டி கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இதுகுறித்து வழக்கறிஞர் வி.வேல்முருகன் பழனிசெட்டி பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பெண் மீது கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், களங்கம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் பாலகுரு விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x