ரூ.17 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் மீட்பு

ரூ.17 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் மீட்பு
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக திருவாரூர் எஸ்.பி எம்.துரை நேரடி கண்காணிப்பில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டார்.

தனிப்படையினர் விசாரணை நடத்தி, ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 110 செல்போன்களை மீட்டனர். இவற்றை சம்பந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, மீட்கப்பட்ட செல்போன்களை திருவாரூர் எஸ்.பி துரை பார்வையிட்டார், அதன்பின்னர் உரிமையாளர்களிடம் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in