பாபநாசம், மணிமுத்தாறில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

பாபநாசம், மணிமுத்தாறில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
Updated on
1 min read

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,197.93 கனஅடி தண்ணீர் வந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 118 அடியாக இருந்தது. பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 1,416 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 627 கனஅடி என மொத்தம் 2,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப் படி மணிமுத்தாறு அணைப்பகுதியில் 2, சேரன்மகாதேவியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in