Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

ஒரு கி.மீ தூரம் குட்டிக்கரணம் அடித்து சிறுவன் சாதனை

விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே ஒரு கி.மீ தூரம் குட்டிக்கரணம் அடித்து 9 வயது சிறுவன் சாதனை படைத் துள்ளார்.

வத்திராயிருப்பு அருகே உள்ள கிழவன்கோயில் பகுதி யைச் சேர்ந்த ஈஸ்வரன்- சித்ரா தம்பதியின் மகன் சந்தோஷ் (9). ஐந்தாம் வகுப்புப் படி த்து வருகிறார். சிறு வயது முதலே குட்டிக்கரணம் அடித்து விளையாடும் இவர், சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக ஒரு கி.மீ தூரம் குட்டிக் கரணம் அடித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஸ்கர் உலக சாதனைக் குழுவினர் சிறுவன் சந்தோஷின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ஆஸ்கர் வேர்ல்டு ரெக்கார்டு எனும் சாத னையாளர் பட்டம், சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x