Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

நெல் கொள்முதல் மையம் திறப்பு

விளாம்பட்டியில் நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்த அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்.

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் மையம் நேற்று திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நெல் கொள்முதல் மையத்தை திறந்துவைத்துப் பேசியதாவது:

நிலக்கோட்டை தாலுகாவில் விளாம்பட்டி, மட்டப்பாறை ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் 1,285 ஏக்கர் நெல் பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 3,855 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,868, ஊக்கத் தொகையாக ரூ.50 சேர்த்து ரூ.1,918 வழங்கப்படுகிறது. தனியாருக்கு நெல் விற்பனை செய்வதைவிட கூடுதல் விலைக்கு அரசு கொள்முதல் மையத்தில் விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்றார். நிகழ்ச்சியில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தணிகாச்சலம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மருதராஜ், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x