Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

வைகை அணைக்கு நீர் வரத்து குறைந்தது

வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து வைகை ஆற்றில் கூடு தல் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.

வைகை, பெரியாறு அணை களின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் 70.34 அடியை எட்டியது. ஆனால் அணையில் இருந்து ஏற்கெனவே திறந்து விடப்பட்ட 600 கன அடி தண்ணீர் மட்டுமே வைகை ஆற்றில் தற்போது ஓடுகிறது.

அதன் பிறகு 3 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப் படவில்லை. தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் வைகை அணைக்கு 1,605 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

அந்த தண்ணீர் ஆற்றிலும், குடிநீருக்கும், பாசனக் கால் வாயிலும் அப்படியே திறந்து விடுவதால் அணை நீர்மட்டம் மேலும் உயரவில்லை.

அதனால், வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை என்றும், ஏற்கெனவே திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தவே அதிக வாய்ப்புள்ளதாகப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x