அரவக்குறிச்சி அருகே வாகனங்கள் மோதல்: தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே வாகனங்கள் மோதல்: தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

அரவக்குறிச்சி அருகே வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம், குன்னூர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன் மகன் விஸ்வநாதன்(25), கிருஷ்ணன் மகன் வினோத்(20). இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டிங் தொழில் செய்து வந்தனர். பொங்கல் பண்டிகைக்காக இருவரும் கடந்த 13-ம் தேதி மோட்டார் சைக்கிளில் ஊருக்குப் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை வினோத் ஓட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக் குறிச்சியை அடுத்த தெத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து(50). மாற்றுத்திறனாளியான இவர், மனைவி லதாவுடன் மூன்று சக்கர சக்கர சைக்கிளில் 13-ம் தேதி இரவு சென்று கொண்டிருந்தார். தெத்துப்பட்டி பிரிவு சாலை அருகே அன்றிரவு இரு வாகனங்களும் மோதிக் கொண்டன.

இதில், விஸ்வநாதன் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 3 பேரும் கரூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில், செல்லும் வழியில் செல்லமுத்துவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி லதாவும் உயிரிழந்தனர்.

மேல்சிகிச்சைக்காக வினோத், கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறி த்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in