Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்ததால் திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்களில் நேற்று பூக்கள் விலை கடுமையாக அதிகரித்து விற் பனையானது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்ததால் திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்களில் நேற்று பூக்கள் விலை கடுமையாக அதிகரித்து விற் பனையானது. அதிகபட்சமாக மல்லிகை கிலோ ரூ.4000, முல்லை ரூ.2000-க்கும் விற் பனையானது.

திண்டுக்கல், நிலக்கோட்டை சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிகப் பரப்பில் பூ சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் பூக்களை விற்பனை செய்ய ஏதுவாக திண்டுக்கல், நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்கள் செயல் படுகின்றன.

திண்டுக்கல்லின் பிற பகுதிகள் மட்டுமின்றி மதுரை, தேனி, கரூர், திருச்சி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். தற்போது தொடர் மழை காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகி விடுகின்றன. இதனால் குறைந்த அளவே வரத்து உள்ளது.

பொங்கலை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்தாலும், இதற்கேற்ப பூக்கள் வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளது. நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை ஒரு கிலோ ரூ.4000-க்கும், முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.2000-க்கும், கனகாம்பரம் ரூ.1200-க்கும் விற்பனையானது. ஜாதிப்பூ ஒரு கிலோ ரூ.1,000-க்கும் விற்பனையானது. விலை அதிகரித்திருந்தாலும் குறைந்த அளவிலான பூக்களே விளைவதால் தங்களுக்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x