Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

மதுரை ஆதீனம் பொங்கல் வாழ்த்து

மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் ஆதீனகர்த்தர் ல அருணகிரிநாத  ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

உழவுத் தொழிலின் முக்கியத்துவத் தையும், உழவரின் சிறப்பையும் உலகறியச் செய்யவும், உழவுக்கு ஆதாரமான இயற் கைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறோம்.

உழவுத் தொழில் சிறப்பாக இருந்தால்தான் நாடு வளம் பெறும் என்பதைக் கருத்தில் கொண்டு வேளாண்மையையும், விவசாயிகளையும் உயர் வடையச் செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளன.

மக்கள் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன் ஜனநாயக மாண்பைப் பின்பற்றி நடக்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x