

திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட் டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண்மை சட்டங்களை திரும் பப் பெற வேண்டும். வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், வேளாண் சட்டங் களுக்கு இடைக்கால தடை என்பது உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் இணைந்து நடத்தும் நாடகம் எனக் கூறி அதை கண்டித்தும், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் போகிப் பண்டிகை நாளில் வேளாண் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்துவது என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன.
அதன்படி, தஞ்சாவூர் ரயிலடியில் விவசாயிகள் போராட்டக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமையில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரமோகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.கே.செல்வகுமார், மகஇக மாநகரச் செயலாளர் ராவணன், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரவிந்தசாமி உள்ளிட்டோர் காவல்துறையின் தடையை மீறி சட்ட நகலை எரித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு ஒன்றியம் தென் னமநாட்டில் நடைபெற்ற வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில், அனைத்துக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
புத்தூர் நடுபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையிலும், பூதலூரில் சமவெளி விவசாயிகள் இயக்கம் பழனிராசன் தலைமையிலும், பேராவூரணியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் தலைமையிலும், திருவையாறில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராம் தலைமையிலும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில்...
இதேபோல, திருச்சி அரவனூர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ராஜா தலைமையிலும், திருச்சி காஜாபேட்டை பகுதியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் ஹரிசந்திரன் தலைமையிலும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின் வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் கோட்ட நிர்வாகி நடராஜன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
திருவாரூர் மாவட்டத்தில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில்...
புதுக்கோட்டை மாவட்டத்தில்...