Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM
காரைக்கால் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ராஜ.லட்சுமணன், செயல் தலைவர் நாக.தணிகாசலம் ஆகியோர், காரைக்கால் ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள புதுச்சேரி அரசின் ஆதி திராவிடர் மாணவர் தங்கும் விடுதி மிகவும் பழமையானதாகும். ஆதி திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களும், அரசு உயர்மட்ட அலுவலர்களும் இவ்விடுதியின் பழைய மாணவர்கள் ஆவார்கள். சிறப்புமிக்க இந்த விடுதியை தற்காலிக சிறைக்கூடமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பது வேதனையளிக்கிறது. எனவே, இந்த முயற்சியை கைவிட்டு, விடுதியை சீரமைத்து, தொடர்ந்து ஆதி திராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT