Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

மாணவிகள் வேலைவாய்ப்பு திறன்களை வளர்த்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐடிஐ), ரூ.7.2 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மூலம் 10 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனத்தை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆட்சியர் அர்ஜூன் சர்மா, மின் உற்பத்தி சாதனத்தை இயக்கிவைத்து மாணவிகள், பயிற்றுநர்கள் மத்தியில் பேசியதாவது:

அரசுத் துறையோ, தனியார் துறையோ, அதில் வேலைவாய்ப்புகளை பெறக்கூடிய அளவில் மாணவ, மாணவிகள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும், எல்லாவற்றுக்கும் வேலைவாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். அதேபோல, பயிற்றுநர்கள் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுடன் தொடர்பில் இருந்து, தொழிற்சாலைகளுக்கான தேவை என்ன என்பதை உணர்ந்து, அதை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், கல்வி நிலைய முதல்வர் ஜி.குணசேகரன், நிலைய மேலாண்மை குழுத் தலைவர் ஆர்.எம்.பைரவன், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x