Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

காரைக்காலில் கடலில் விழுந்த மீனவர்கள் 2 பேர் மாயம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு சுனாமி நகரைச் சேர்ந்த குணவேலு மற்றும் அவரது மகன் கனிஷ், சகோதரர் சித்திரவேல் ஆகிய 3 பேர் நேற்று மாலை, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, பைபர் படகில் புறப்பட்டு கடலுக்குள் சென்றுள்ளனர்.

முகத்துவாரப் பகுதியை கடந்து செல்லும்போது, அலையில் சிக்கிய படகு திடீரென கவிழ்ந்துள்ளது. இதில் படகில் இருந்த 3 பேரும் கடல் நீரில் மூழ்கி உயிருக்கு போராடி உள்ளனர். அப்போது கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு குணவேலு தப்பி கரை சேர்ந்தார். கனிஷ், சித்திரவேல் ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

இது குறித்து தகவலறிந்த கடலோர காவல் நிலைய போலீஸார் ரோந்து படகு மூலம் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத்துறையினரும், மீனவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x