Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
கோவை: கோவை பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம், கிருஷ்ணா காலனியைச் சேர்ந்தவர் மல்லீஸ்வரன்(40). அரசுப் பேருந்து ஓட்டுநர். இவர், சாடிவயலில் இருந்து காந்திபுரம் நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்தை நேற்று முன்தினம் ஓட்டி வந்துள்ளார். ஆலாந்துறை வந்தபோது, பயணிகளிடம் ‘எனக்கு நெஞ்சுவலி அதிகமாக உள்ளது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பேருந்தை நிறுத்துகிறேன்’’ என கூறிவிட்டு வேகமாக ஓட்டியுள்ளார். ஹைஸ்கூல் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்திய மல்லீஸ்வரன், அவசரமாக இறங்கி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மல்லீஸ்வரன் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT