நாட்டு மாடுகளை காக்கும் விவசாயிகளுக்கு தனி ஊக்கத்தொகை காங்கயம் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உறுதி

நாட்டு மாடுகளை காக்கும் விவசாயிகளுக்கு தனி ஊக்கத்தொகை  காங்கயம் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உறுதி
Updated on
1 min read

நாட்டு மாடுகளை காக்கும் விவசாயிகளுக்கு தனி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பேருந்து நிலையத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் அவர் பேசியதாவது:

விளைநிலங்களில் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பங்களை வைக்கக்கூடாது என்பதை சட்டமாக கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறோம். மாட்டு இன ஆராய்ச்சியில் இருப்பவர்கள், நம் பூர்வீக மாடுகளை அரவணைத்து, ஆதரித்து காக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் செய்யும். நாட்டு மாடுகளை காக்கும் விவசாயிகளுக்கு தனி ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்திருக்கிறோம். மூன்று வேளை உணவு சாப்பிடுவோர், விவசாயத்தை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. விவசாயம், நெசவு, கால்நடை போன்ற தொழில் மேலும் விருத்தியடைய, திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும் என்ற திட்டமும் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பவர்கள், நேர்மையின் பக்கம் நிற்க வேண்டும்" என்றார்.

பூஞ்சானம் பிடித்த கரும்பு விநியோகம்

உடுமலை, மடத்துக்குளத்தில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in