Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

‘தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் பெறவே மத்திய பாஜக அரசுடன் அதிமுக இணக்கம்’

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெரியதோட்டம் மற்றும் வாலிபாளையம் பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது, "சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதை அடிப்படையாக வைத்து, நாங்கள் அடிமையாக சென்றுவிட்டதாக தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. பாஜகவுடன் புதிதாக கூட்டணி வைக்கவில்லை. திமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் திமுகவினர் 5 பேர் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர் என்பதை இஸ்லாமிய மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது, பாஜகவுடனான கூட்டணியை நாங்கள் முறித்துக்கொண்டு வெளியே வந்தபோது, திமுகவினர் உள்ளே நுழைந்து கூட்டணி வைத்துக் கொண்டனர்.

தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டுவரவே மத்திய பாஜக அரசுடன் நல்லறுவு கொண்டுள்ளோம். அதிமுக அரசு மக்களுக்கானது. மக்களுக்கான முதன்மை கட்சியாக அதிமுக களத்தில் நிற்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x