Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த விவகாரம் யூ-டியூப் சேனல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த சிலர் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து, அதை சேனலில் வெளியிடுவதாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக தனியார் யூ-டியூப் சேனல் தொகுப்பாளரான நீலாங்கரையைச் சேர்ந்த ஆசின் பத்சா (23), கேமராமேனான பெருங்குடி அஜய்பாபு (24), யூ டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்கள், கடற்கரை பகுதிகளுக்குச் சென்று அங்கு வரும் இளம் பெண்களை குறிவைத்து கேளிக்கையாக பேசி வீடியோ பதிவு செய்வதோடு பெண்களை ஆபாசமாக காட்டும் வகையிலும் பதிவு செய்கின்றனர். பின்னர் அதில் ஆபாச வார்த்தைகளை மட்டும் எடிட் செய்து, அதை தங்களது யூ-டியூப் சேனனில் வெளியிட்டு வந்துள்ளனர். இதேபோல் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவு செய்துள்ளனர். அதை 7 கோடி மக்கள் இதுவரை பார்த்துள்ளனர். இந்த யூ-டியூப் தளத்தை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x