Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்த 9-ம்தேதி அதிமுக மகளிர் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின்மீது புகார் அளித்தார். அதில், முதல்வர் பழனிசாமி, சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவி பெற்றதாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
எனவே, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கலகம் ஏற்படுத்துதல், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT