Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
வேலூர்: ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக் கோரி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் அடுத்த மேல்மொணவூரில் நலவாரிய அலுவலகம் முன்பாக வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் பொங்கல் வைக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு, மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் காசிநாதன், மாவட்டச் செயலாளர் பரசுராமன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில், பங்கேற்றவர்கள் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பென்ஷன் உடனே வழங்க வேண்டும், கட்டுமான நல வாரிய தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதுபோல் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் பங்க்குகளை அதிகப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT