Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

முன்னாள் பாமக நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

வெங்கடேசன்.

வேலூர்

பணம் மோசடி குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பாமக நிர்வாகி வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (47). வேலூர் நகர பாமக முன்னாள் செயலாளராக இருந்தவர். இவர், பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சீட் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி வெங்கடேசனை கைது செய்தனர்.

இதையடுத்து, வெங்கடேசனை கட்சியின் அடிப்படை உறுப் பினர் பதவியில் இருந்து நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டார். தொடர் புகார்களின் அடிப்படையில் வெங்கடேசனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரை செய்தார். இதனையேற்று, வெங்கடேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x