மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும்  தமிழக மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

Published on

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற் படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு 2020-2021-ம் ஆண்டு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்கட்டமாக 100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2020-2021-ம் கல்வி ஆண்டிற்கு புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து அந்தந்த கல்வி நிறுவனத்தில் வழங்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை வரும் 4-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை 5, தொலைபேசி எண்: 044-2855142 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in