விஷமருந்தி மனைவி இறந்ததால் கணவனும் தற்கொலை முயற்சி

விஷமருந்தி மனைவி இறந்ததால் கணவனும் தற்கொலை முயற்சி
Updated on
1 min read

உதகை கீழ் கோடப்பமந்து அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி பிரதீப் (30). இவரது மனைவி ஜமுனா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதில் ஜமுனா விஷமருந்தினார். ஆபத்தான நிலையிலிருந்த அவர் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜமுனா உயிரிழந்தார். மனைவி இறந்த சோகத்தில் பிரதீப்பும் விஷமருந்தினார். உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உதகை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in