இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி திருச்செங்கோடு வட்டாட்சியரிடம், எலச்சிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தலைமையிலானோர் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ள விவரம்:

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லிபாளையம், செம்பாம்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து வரும் பட்டியல் பிரிவினர்.

வீட்டுமனை இல்லாததால் கடந்த 8 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை கேட்டு மனு அளித்து வருகின்றனர்.

எனினும், இதுவரை அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாமல் உள்ளது. உரிய விசாரணை நடத்தி இலவச வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in