Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

தேனியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

தேனியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டுமானப் பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொடர் முயற்சியால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி, பெரியகுளத்தில் அரசு செவிலியர் கல்லூரி, போடியில் அரசு பொறியியல் கல்லூரி, தேக்கம்பட்டியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, வீரபாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது வீரபாண்டி அருகே தப்புக்குண்டு கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம் அமைய உள்ளது. 253.64 ஏக்கரில் ரூ.265 கோடி மதிப்பில் அமையும் இக்கல்லூரியை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று கட்டுமானப்பணி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிர்வாகக் கட்டிடம், நவீன வகுப்பறைகளுடன் கூடிய எட்டு கல்வித்தொகுதித் திட்டங்கள், தனித்தனி விடுதிகள், உணவகம், முதல்வர், நவீன ஆய்வகத்துடன் கூடிய பால், இறைச்சி பதப்படுத்தும் தொழில்நுட்ப நிலையங்கள் உட்பட 15 துறைகள், கால்நடை பண்ணை வளாகம் உள்ளிட்டவை இதில் அமைய உள்ளன.

கட்டுமானப் பணிகளை விரை வில் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர துறை அலுவலர் களுக்கு துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், தேனி எம்.பி. ப. ரவீந்திரநாத், எஸ்டிகே.ஜக்கையன் எம்எல்ஏ, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், பதிவாளர் பா.டென்சிங் ஞானராஜ், சார் ஆட்சியர் சினேகா, தேனி கால் நடை மருத்துவக் கல்லூரி முதல் வர் அ.பழனிசாமி, தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x