

வேலூர் சிறையில் உண்ணா விரதம் இருந்துவரும் முருகனுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் நேற்று 3 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப் பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிகளை மீறியதாக வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் பேசும் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தனது மனைவி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சிறையில் முருகன் நேற்றுடன் 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சிறை காவலர்களிடம் வாக்குவாதம்
4-வது முறையாக குளுக்கோஸ்