Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM

புதிதாக 77 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 77 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் பாதிப்பு எண் ணிக்கை 19 ஆயிரத்து 440-ஆக உயர்ந் துள்ளது. ராணிப்பேட்டையில் புதிதாக நேற்று 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அம் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 273-ஆக உயர்ந்துள்ளது. திருப் பத்தூர் மாவட்டத்தில் 8 பேர் கரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 328-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 828-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x