Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் பூங்காவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

ஓசூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x