Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM

கால்வாய் தூர்வாரும் பணியை தடுத்ததால் கிராம மக்கள் சாலை மறியல்

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் கால்வாய் தூர்வாரும் பணியைத் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து மதுரை - ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட கீழமேல்குடி கிராம மக்கள்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழ மேல்குடி கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து ராஜகம்பீரம் வழியாக கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கீழமேல்குடி கண்மாய்க்குச் செல்லும் கால்வாயை கிராம மக்கள் தூர்வாரினர்.

இந்நிலையில் இக்கால்வாய் தனது இடத்தில் செல்வதாகக் கூறி ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தூர்வாரும் பணியைத் தடுத்து நிறுத்தினார். இதைக் கண்டித்து, கீழமேல்குடி கிராம மக்கள் ராஜகம்பீரம் அருகே மதுரை - ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார், பொதுப்பணித் துறையினர் கிராம மக்கள் மற்றும் தனி நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரச்சினைக்குரிய இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x