Published : 06 Dec 2020 03:18 AM
Last Updated : 06 Dec 2020 03:18 AM

48 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக நேற்று 48 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 297 ஆகவும் அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 18,754-ஆக உயர்ந்தது. கரோனா தொற்றில் இருந்து 18,318 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 160 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x