Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

பெண் வன்கொடுமையை தடுக்க தனிப்பிரிவு தொடங்க கோரிக்கை

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழக தேசியக் குழு உறுப்பினர் எம்.பிலோமினா, காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நாகை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்முறைகளும், குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக, காவல் நிலையத்துக்கு வரும் புகார்கள் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால், மக்கள் மத்தியில் மகளிர் காவல் நிலையத்தின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. மேலும் பாக்கெட் சாராயம், போதைப் பொருட்களின் விற்பனை காவல் துறையின் கண்காணிப்புடன் நடைபெற்று வருகிறது. எனவே, நாகை மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைத் தடுக்கவும் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x