Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட கட்சி தலைமைக்கு கோரிக்கை அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிக்கு இடமளிக்காமல் அதிமுகவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோ சனைக்கூட்டம் நேற்று நடைபெற் றது. இதில், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகளிடம் வரைவு வாக்காளர் பட்டியல்களை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன. இதில்,கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக் காமல் அனைத்து தொகுதியிலும் அதிமுக இரட்டை இலை சின்னத் தில் போட்டியிட வேண்டும் என ஏற்கெனவே கட்சித் தலைமைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

4 தொகுதிகளிலும் அதிமுக அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி. அதற்கான நம்பிக்கை என்னிடம் உள்ளது. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், கிளைச் செயலாளர் கள், நகரம், ஒன்றியம், பேரூராட்சிச் செயலாளர்கள் தங்களுக்கான பகுதிகளில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

அதிமுக அரசின் சாதனை திட்டங்களை கிராமப்புற மக்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும், அரசு அதிகாரிகளையும், பொது மக்களையும் தரக்குறைவாக பேசியது இல்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, தொழி லாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் பேசும்போது, ‘‘கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக தமிழகத்தில் நல்லாட்சி வழங்கி யுள்ளது என மக்கள் பேசத் தொடங் கியுள்ளனர். அதேபோல, 2021-ம் ஆண்டும் நல்லாட்சி வழங்க அதிமுக தயாராகி வருகிறது. அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன், விசுவாசமாக, தேர்தல் பணியாற்றினால் வரும் சட்டப் பேரவை தேர்தலில் நாம் வெற்றிப் பெறுவது உறுதி‘‘ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள், கே.ஜி.ரமேஷ் (திருப்பத்தூர்), கோ.வி.சம்பத்குமார்(வாணியம்பாடி), மாவட்ட அவைத்தலைவர் ராஜேந் திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் டில்லிபாபு, மாவட்ட மகளரணிச்செயலாளர் மஞ்சுளா, வாணியம்பாடி நகரச்செயலாளர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x