

திருநெல்வேலி மற்றும் பாளையங் கோட்டையில் நேற்று மழை பெய்தபோதும், தீபாவளிக்கு பொருட்கள் வாங்க மக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மழை காரணமாக பட்டாசு விற்பனை மந்தமாக இருந்தது. சிறுவர்களுக்கான பிளாஸ்டிக் துப்பாக்கி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மழையால் பூக்கள் வரத்து குறைந்திருந்தது. இதனால் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் பிச்சிப்பூ ரூ.50-ல் இருந்து ரூ.200 ஆகவும், சம்பங்கி ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்திருந்தது. கதம்ப மாலை 3 முழம் ரூ.20-க்கு விற்பனையானது. முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து உள்ளிட்ட பண்டங்கள் தலா ரூ.5-க்கும், காரம், இனிப்புகள் கொண்ட 1 கிலோ பார்சல் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோவில்பட்டி
தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவிலிலும் தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.